இரக்க மணமும் அரக்க குணமும் கொண்ட வண்ணார் குல சிங்கங்களே.. அணிதிரள்வீர்!!
Pages
▼
Monday 14 October 2013
Monday 7 October 2013
Thursday 3 October 2013
Ethiraju vannar, Cinnachsamy vannar, Janakiraman vannar /எத்திராஜு வண்ணார், சின்னசாமி வண்ணார் , ஜானகிராமன் வண்ணார்
சின்னசாமி வண்ணார் அவர்கள் சூரியகுலத்தோரின் மிகப்பெரிய போராளி.
சூரியகுலத்தோரின் தலைமகன், அவருக்கு பின் வந்த நமது குலத்தின்
விடியல்கள் எதிராஜு வண்ணார் அவருக்கு பின் ஜயா
ஜானகிராமன் வண்ணார் அவர்கள்.. விதைத்த விதை இன்று
தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்டர் மகாசபை என்ற செடியாக
வளர்ந்துள்ளது... நாளடைவில் அது பெரிய ஆலமரம்மாக வளரும்
ஆலமரத்தின் நிழலில் உக்கார்ந்தது.. இளப்பாரளாம்.....
சூரியகுலத்தோரின் தலைமகன், அவருக்கு பின் வந்த நமது குலத்தின்
விடியல்கள் எதிராஜு வண்ணார் அவருக்கு பின் ஜயா
ஜானகிராமன் வண்ணார் அவர்கள்.. விதைத்த விதை இன்று
தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்டர் மகாசபை என்ற செடியாக
வளர்ந்துள்ளது... நாளடைவில் அது பெரிய ஆலமரம்மாக வளரும்
ஆலமரத்தின் நிழலில் உக்கார்ந்தது.. இளப்பாரளாம்.....
Ethiraju vannar, Cinnachsamy vannar, Janakiraman vannar /எத்திராஜு வண்ணார், சின்னசாமி வண்ணார் , ஜானகிராமன் வண்ணார்
சின்னசாமி வண்ணார் அவர்கள் சூரியகுலத்தோரின் மிகப்பெரிய போராளி.
சூரியகுலத்தோரின் தலைமகன், அவருக்கு பின் வந்த நமது குலத்தின்
விடியல்கள் எதிராஜு வண்ணார் அவருக்கு பின் ஜயா
ஜானகிராமன் வண்ணார் அவர்கள்.. விதைத்த விதை இன்று
திருக்குறிப்பு தொண்டர் மகாசபை என்ற செடியாக
வளர்ந்துள்ளது... நாளடைவில் அது பெரிய ஆலமரம்மாக வளரும்
ஆலமரத்தின் நிழலில் உக்கார்ந்தது.. இளப்பாரளாம்.....
சூரியகுலத்தோரின் தலைமகன், அவருக்கு பின் வந்த நமது குலத்தின்
விடியல்கள் எதிராஜு வண்ணார் அவருக்கு பின் ஜயா
ஜானகிராமன் வண்ணார் அவர்கள்.. விதைத்த விதை இன்று
திருக்குறிப்பு தொண்டர் மகாசபை என்ற செடியாக
வளர்ந்துள்ளது... நாளடைவில் அது பெரிய ஆலமரம்மாக வளரும்
ஆலமரத்தின் நிழலில் உக்கார்ந்தது.. இளப்பாரளாம்.....
Wednesday 25 September 2013
Monday 23 September 2013
வண்ணார் வரலாறு Histroy of Vannar
சிதம்பரம் வண்ணார் மடம் செப்பேட்டில் வீரபத்திரர் பங்கு பற்றி புதிய தகவல்கள்
சிதம்பரம் நடராசர் கோவில் குறித்தும், நகரில் உள்ள பல மடங்கள் குறித்தும் அவ்வப்போது சாசனங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. சமீபத்தில் விஜயநகர அரசர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட வண்ணார் மடம் குறித்த இரு செப்பேடுகளைத் தொல்லியல் அறிஞர் ச.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்துள்ளார். முதல் செப்பேடு மூன்று ஏடுகளைக் கொண்டு முழுமையாக உள்ளது.
இரண்டாம் செப்பேடு ஒரே ஏட்டுடன் முழுமையின்றி உள்ளது. எனினும், இரண்டும் ஒரே காலமாகும். இரண்டு செப்பேடுகளிலும் தொடக்கத்தில் சிவலிங்கமும் நந்தியும் சூலமும் சூரிய சந்திர உருவங்களும் வீரமணவாளர் தேவியருடன் கூடிய சிற்பங்களும் துணிவெளுக்கும் கல்லும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பின்னர் விஜயநகர அரசர் மெய்க்கீர்த்தியும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுதராயர் காலத்தில் மடம் புதுப்பிக்கப்பட்ட விவரங்களும் உள்ளன.
வண்ணார் ஜாதி தோற்றத்திற்கான புராண வரலாறு இதில் கூறப்பட்டுள்ளது. தட்சணையும் அவனுக்கு உதவியாக வேள்வி செய்த தேவர் மற்றும் தேவிகளை அழிக்க, வீரபத்திரரைச் சிவபெருமானும், காளியை உமையம்மையும் தோற்றுவித்தனர். அவர்கள் அவ்வாறே அழித்தனர். தேவர்களை வீரபத்திரரும், தேவிகளைக் காளியும் அழிக்கின்றனர்.
பின்னர் இறந்த தேவர், தேவிகளுக்கு மீண்டும சிவன் உயிர்கொடுத்தபோது அவர்கள் மீதிருந்த உதிரம்போக, வருணனை மழை பெய்யும்படி சிவன் ஆணையிட்டார். வருணன் மழைபெய்தும் குருதிக்கறை ஆடைகளில் இருந்து போகாததால், வீரபத்திரர் மரபில் ஒருவர் தோற்றுவிக்கப்பட்டு வீரன் எனப் பெயரும் சூட்டி ஆடைகளை வெளுக்க அனுப்பி வைக்கப்படுகிறார். இந்த வண்ணார் மரபில் திருக்குறிப்புத் தொண்டர் பிறந்தார். இவருடைய மரபில் வீரமணவாளர் பிறந்து அவர்தம் பெண்ணை அண்ணாமலையாருக்குத் தந்தார். பிறகு வண்ணாரின் சிறப்புகள் விரிவாகச் செப்பேட்டில் கூறப்படுகின்றன.
சக ஆண்டு 1445ம் ஆனந்த ஆண்டும் பொருந்திய (கி.பி., 1593) காலத்தில் சிதம்பரம் கோவிலை வழிபட கிருஷ்ணதேவராயர் வருகிறார். அவருடன் அவருடைய துணிகளை வெளுக்கும் குருவப்ப வண்ணானும் சிதம்பரம் வருகிறார். சிதம்பரத்தில் பூர்வீகமாக இருந்து வரும் வண்ணார் மடம் அழிந்த நிலையில் இருப்பதைக் கேட்டு அவரும் தகுந்த ஆணை பிறப்பித்தார். இதற்காக கூட்டப்பட்ட சிறப்புக்கூட்டத்தில் எல்லா ஜாதியினரும் பங்கேற்றனர். அதன்படி, கீழைக்கோபுர வாசலில், வடதுண்டில் இண்டந்தெரு வீதியின் கீழ் சிறகில் சேக்கிழையான் என்பவரிடம் மனை வாங்கி மணவாளப் பிள்ளையார் கோவிலும் மடமும் கட்டப்பட்ட விவரம் இந்தச் செப்பேட்டில் உள்ளது.
கிருஷ்ண தேவராயருக்குப் பின், அச்சுதராயர் ஆட்சிக்கு வந்தபோதும் மடத்திற்கான கட்டளை ஒழுங்காக, வராததால் முறையீடு செய்து முடிவு எடுக்கப்பட்ட தகவலும் உள்ளன. அச்சுதராயர் கல்வெட்டுகள் நடராசர் கோவிலில் உள்ளன.வண்ணார் மரபில் வந்த பலர் கூடி மகமை வழங்க உடன்பட்டுச் செப்பேடும் வெட்டுகின்றனர். ஒவ்வொரு வண்ணார்க்குடியும் குடிக்கொரு பணமும் மணப்பெண்ணும் மணமகனும் திருமணத்தின் போது, தலா ஒரு பணமும் தருவது என்றும் முடிவு செய்யும் தகவல் உண்டு. தற்போது மடம் சிதைந்தபடி உள்ளது. இத்தனை தகவல் கூறும் இருசெப்பேடுகளும் பரங்கிப்பேட்டை ஆசிரியர் கு.செல்வராசன் பாதுகாப்பில் உள்ளன. மேலும் இவைகள் குறித்து கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்து வருகிறார்.
சிதம்பரம் நடராசர் கோவில் குறித்தும், நகரில் உள்ள பல மடங்கள் குறித்தும் அவ்வப்போது சாசனங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. சமீபத்தில் விஜயநகர அரசர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட வண்ணார் மடம் குறித்த இரு செப்பேடுகளைத் தொல்லியல் அறிஞர் ச.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்துள்ளார். முதல் செப்பேடு மூன்று ஏடுகளைக் கொண்டு முழுமையாக உள்ளது.
இரண்டாம் செப்பேடு ஒரே ஏட்டுடன் முழுமையின்றி உள்ளது. எனினும், இரண்டும் ஒரே காலமாகும். இரண்டு செப்பேடுகளிலும் தொடக்கத்தில் சிவலிங்கமும் நந்தியும் சூலமும் சூரிய சந்திர உருவங்களும் வீரமணவாளர் தேவியருடன் கூடிய சிற்பங்களும் துணிவெளுக்கும் கல்லும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. பின்னர் விஜயநகர அரசர் மெய்க்கீர்த்தியும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுதராயர் காலத்தில் மடம் புதுப்பிக்கப்பட்ட விவரங்களும் உள்ளன.
வண்ணார் ஜாதி தோற்றத்திற்கான புராண வரலாறு இதில் கூறப்பட்டுள்ளது. தட்சணையும் அவனுக்கு உதவியாக வேள்வி செய்த தேவர் மற்றும் தேவிகளை அழிக்க, வீரபத்திரரைச் சிவபெருமானும், காளியை உமையம்மையும் தோற்றுவித்தனர். அவர்கள் அவ்வாறே அழித்தனர். தேவர்களை வீரபத்திரரும், தேவிகளைக் காளியும் அழிக்கின்றனர்.
பின்னர் இறந்த தேவர், தேவிகளுக்கு மீண்டும சிவன் உயிர்கொடுத்தபோது அவர்கள் மீதிருந்த உதிரம்போக, வருணனை மழை பெய்யும்படி சிவன் ஆணையிட்டார். வருணன் மழைபெய்தும் குருதிக்கறை ஆடைகளில் இருந்து போகாததால், வீரபத்திரர் மரபில் ஒருவர் தோற்றுவிக்கப்பட்டு வீரன் எனப் பெயரும் சூட்டி ஆடைகளை வெளுக்க அனுப்பி வைக்கப்படுகிறார். இந்த வண்ணார் மரபில் திருக்குறிப்புத் தொண்டர் பிறந்தார். இவருடைய மரபில் வீரமணவாளர் பிறந்து அவர்தம் பெண்ணை அண்ணாமலையாருக்குத் தந்தார். பிறகு வண்ணாரின் சிறப்புகள் விரிவாகச் செப்பேட்டில் கூறப்படுகின்றன.
சக ஆண்டு 1445ம் ஆனந்த ஆண்டும் பொருந்திய (கி.பி., 1593) காலத்தில் சிதம்பரம் கோவிலை வழிபட கிருஷ்ணதேவராயர் வருகிறார். அவருடன் அவருடைய துணிகளை வெளுக்கும் குருவப்ப வண்ணானும் சிதம்பரம் வருகிறார். சிதம்பரத்தில் பூர்வீகமாக இருந்து வரும் வண்ணார் மடம் அழிந்த நிலையில் இருப்பதைக் கேட்டு அவரும் தகுந்த ஆணை பிறப்பித்தார். இதற்காக கூட்டப்பட்ட சிறப்புக்கூட்டத்தில் எல்லா ஜாதியினரும் பங்கேற்றனர். அதன்படி, கீழைக்கோபுர வாசலில், வடதுண்டில் இண்டந்தெரு வீதியின் கீழ் சிறகில் சேக்கிழையான் என்பவரிடம் மனை வாங்கி மணவாளப் பிள்ளையார் கோவிலும் மடமும் கட்டப்பட்ட விவரம் இந்தச் செப்பேட்டில் உள்ளது.
கிருஷ்ண தேவராயருக்குப் பின், அச்சுதராயர் ஆட்சிக்கு வந்தபோதும் மடத்திற்கான கட்டளை ஒழுங்காக, வராததால் முறையீடு செய்து முடிவு எடுக்கப்பட்ட தகவலும் உள்ளன. அச்சுதராயர் கல்வெட்டுகள் நடராசர் கோவிலில் உள்ளன.வண்ணார் மரபில் வந்த பலர் கூடி மகமை வழங்க உடன்பட்டுச் செப்பேடும் வெட்டுகின்றனர். ஒவ்வொரு வண்ணார்க்குடியும் குடிக்கொரு பணமும் மணப்பெண்ணும் மணமகனும் திருமணத்தின் போது, தலா ஒரு பணமும் தருவது என்றும் முடிவு செய்யும் தகவல் உண்டு. தற்போது மடம் சிதைந்தபடி உள்ளது. இத்தனை தகவல் கூறும் இருசெப்பேடுகளும் பரங்கிப்பேட்டை ஆசிரியர் கு.செல்வராசன் பாதுகாப்பில் உள்ளன. மேலும் இவைகள் குறித்து கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்து வருகிறார்.
Sunday 22 September 2013
”வண்ணான்’ஸ் Day”
----- காதலர் தினம் --------
காதலர் தினத்தை எல்லாரும் “வெலண்டைன்ஸ் Day” அப்படின்னு சொல்லுவாங்க ஆனா அது தப்பு ”வண்ணான்’ஸ் Day” அதுதான் சரி
வண்ணான்’ஸ் Day தான் காலப்போக்கில மருவி “வெலண்டைன்ஸ் Day” ஆ மாறிப் போச்சு.
இந்த ”வண்ணான்’ஸ் Day” உருவான வரலாறு தெரியுமா உங்களுக்கு..? சொல்றன் கேளுங்க
இற்றைக்கு சில பல ஆண்டுகளுக்கு முன்னாடி ஒரு ஊர்ல ஒரு காதல் ஜோடி இருந்துச்சாம்.. அதுதான் அந்த ஊர்ல முதலாவது காதல் ஜோடியாம்.. அவங்க காதல அவங்க ரெண்டு பேர் வீட்லையும் ஏத்துக்கவே இல்லையாம்..
எவ்வளவோ ட்ரை பண்ணியும் வருசக் கணக்கா காத்திருந்தும் இரு வீட்டாரும் சம்மதிக்கவே இல்லையாம். பொறுமை இழந்த ரெண்டுபேரும் ஒன்னா தற்கொலை பண்ணிக்க ஆத்துல குதிக்கப் போனாங்களாம்…
அந்த நேரமா அந்த ஆத்துல ஒரு வண்ணான் உடுப்பு துவைச்சிட்டு நின்னானாம். அந்த ஊர்லையே அவர் மட்டும்தான் வண்ணானாம் அதனால அந்த ஊர் மக்கள் வண்ணான் எண்டுதான் அவரைக் கூப்பிடுவாங்களாம்….
அவரு அந்த காதல் ஜோடிய பாத்துட்டு என்ன பண்ணப் போறீங்கன்னு கேக்க அவங்க நடந்ததையெல்லாம் சொன்னாங்களாம்…
அதைக் கேட்டு மனமிரங்கிய அந்த வண்ணான் இந்தக் காதல் சாகக்கூடாது கண்டிப்பா வாழனும்னு சொல்லி அவர்கிட்ட இருந்த கழுதையைக் கொடுத்து இந்தாப்பா இந்தக் கழுதைல ஏறி நீங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டே ஓடிடுங்க ஓடிப்போய் எங்கையாச்சும் போய் சந்தோசமா வாழுங்கப்பா எண்டு சொல்லி தன் கழுதையக் கொடுத்து அனுப்பிவச்சாராம்
அந்த ஜோடியும்டு கழுதைல ஊரை விட்டே ஓடிப் போயிட்டாங்களாம்….
இப்படி தன்னிடமிருந்த ஒரே ஒரு கழுதையையும் கொடுத்து காதலைச் சேர்த்து வெச்ச அந்த வண்ணானிடம் இருந்த நல்ல மனசு நமக்கு இல்லாம போயிட்டேன்னு நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்ட அந்த ஊர் நாட்டாம ஒரு முடிவுக்கு வந்தார்.
அதாவது அந்த காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிய நாளான பெப்ரவரி 14ஐ காதலர் தினமாக கொண்டாடவேண்டும் என்றும் அந்நாளுக்கு அந்த காதல கழுதையைக் கொடுத்து சேர்த்துவெச்ச வண்ணானின் ”வண்ணான்” எண்ட பெயர்சூட்டப்பவேண்டும் என்றும் மக்களுக்கு அறிவித்தார்..
அதாவது பெப்ரவரி 14 ”வண்ணான்’ஸ் Day”
மேலும் இந்த தினத்தில் ஊரிலுள்ள காதலர்கள் மற்றும் காதலித்து திருமணம் முடித்தவர்கள் அனைவரும் நாட்டாமை உட்காரும் ஆலமரத்தடியில் இருந்து அடுத்த ஊர் வரை ஓடி மீண்டும் நாட்டாமையின் ஆலமரத்தடிக்கு வர வேண்டும். வீட்டுக்கு தெரியாமல் காதலிப்பவர்கள் தாங்கள் இருக்கும் பார்க் பீச்சில் ஒரு ரவுண்ட் ஓடலாம்.. என்றும் உத்தரவிட்டார்………
இதுதான் வரலாறு…..இப்படி உருவானதுதான் இந்த ”வண்ணான்’ஸ் Day”. இதைத்தான் இப்ப உள்ளதுக கொஞ்சம் ஸ்டைல்லா வெலண்டைன்ஸ் Day னு மாத்திக்கிட்டு கொண்டாடிட்டு திரியுதுக.
காதலர் தினத்தை எல்லாரும் “வெலண்டைன்ஸ் Day” அப்படின்னு சொல்லுவாங்க ஆனா அது தப்பு ”வண்ணான்’ஸ் Day” அதுதான் சரி
வண்ணான்’ஸ் Day தான் காலப்போக்கில மருவி “வெலண்டைன்ஸ் Day” ஆ மாறிப் போச்சு.
இந்த ”வண்ணான்’ஸ் Day” உருவான வரலாறு தெரியுமா உங்களுக்கு..? சொல்றன் கேளுங்க
இற்றைக்கு சில பல ஆண்டுகளுக்கு முன்னாடி ஒரு ஊர்ல ஒரு காதல் ஜோடி இருந்துச்சாம்.. அதுதான் அந்த ஊர்ல முதலாவது காதல் ஜோடியாம்.. அவங்க காதல அவங்க ரெண்டு பேர் வீட்லையும் ஏத்துக்கவே இல்லையாம்..
எவ்வளவோ ட்ரை பண்ணியும் வருசக் கணக்கா காத்திருந்தும் இரு வீட்டாரும் சம்மதிக்கவே இல்லையாம். பொறுமை இழந்த ரெண்டுபேரும் ஒன்னா தற்கொலை பண்ணிக்க ஆத்துல குதிக்கப் போனாங்களாம்…
அந்த நேரமா அந்த ஆத்துல ஒரு வண்ணான் உடுப்பு துவைச்சிட்டு நின்னானாம். அந்த ஊர்லையே அவர் மட்டும்தான் வண்ணானாம் அதனால அந்த ஊர் மக்கள் வண்ணான் எண்டுதான் அவரைக் கூப்பிடுவாங்களாம்….
அவரு அந்த காதல் ஜோடிய பாத்துட்டு என்ன பண்ணப் போறீங்கன்னு கேக்க அவங்க நடந்ததையெல்லாம் சொன்னாங்களாம்…
அதைக் கேட்டு மனமிரங்கிய அந்த வண்ணான் இந்தக் காதல் சாகக்கூடாது கண்டிப்பா வாழனும்னு சொல்லி அவர்கிட்ட இருந்த கழுதையைக் கொடுத்து இந்தாப்பா இந்தக் கழுதைல ஏறி நீங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டே ஓடிடுங்க ஓடிப்போய் எங்கையாச்சும் போய் சந்தோசமா வாழுங்கப்பா எண்டு சொல்லி தன் கழுதையக் கொடுத்து அனுப்பிவச்சாராம்
அந்த ஜோடியும்டு கழுதைல ஊரை விட்டே ஓடிப் போயிட்டாங்களாம்….
இப்படி தன்னிடமிருந்த ஒரே ஒரு கழுதையையும் கொடுத்து காதலைச் சேர்த்து வெச்ச அந்த வண்ணானிடம் இருந்த நல்ல மனசு நமக்கு இல்லாம போயிட்டேன்னு நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்ட அந்த ஊர் நாட்டாம ஒரு முடிவுக்கு வந்தார்.
அதாவது அந்த காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிய நாளான பெப்ரவரி 14ஐ காதலர் தினமாக கொண்டாடவேண்டும் என்றும் அந்நாளுக்கு அந்த காதல கழுதையைக் கொடுத்து சேர்த்துவெச்ச வண்ணானின் ”வண்ணான்” எண்ட பெயர்சூட்டப்பவேண்டும் என்றும் மக்களுக்கு அறிவித்தார்..
அதாவது பெப்ரவரி 14 ”வண்ணான்’ஸ் Day”
மேலும் இந்த தினத்தில் ஊரிலுள்ள காதலர்கள் மற்றும் காதலித்து திருமணம் முடித்தவர்கள் அனைவரும் நாட்டாமை உட்காரும் ஆலமரத்தடியில் இருந்து அடுத்த ஊர் வரை ஓடி மீண்டும் நாட்டாமையின் ஆலமரத்தடிக்கு வர வேண்டும். வீட்டுக்கு தெரியாமல் காதலிப்பவர்கள் தாங்கள் இருக்கும் பார்க் பீச்சில் ஒரு ரவுண்ட் ஓடலாம்.. என்றும் உத்தரவிட்டார்………
இதுதான் வரலாறு…..இப்படி உருவானதுதான் இந்த ”வண்ணான்’ஸ் Day”. இதைத்தான் இப்ப உள்ளதுக கொஞ்சம் ஸ்டைல்லா வெலண்டைன்ஸ் Day னு மாத்திக்கிட்டு கொண்டாடிட்டு திரியுதுக.
வண்ணார் மடம்
எல்லா
புராணங்களும் தவ வாழ்க்கையை மேற்கொண்டவர்களால் சொல்லப்பட்டவையே.
புராணங்களைத் தொகுத்தவரும், மஹாபாரதத்தைத் தந்தவருமான வியாசரும் தவ
வாழ்க்கையை மேற்கொண்டவர்தான். ராமன் வாழ்ந்த சமகாலத்திலேயே வாழ்ந்து
ராமாயணம் இயற்றிய வால்மீகியும் தவ வாழ்க்கையை ஏற்றவர்தான். இத்தகையவர்களது
வழிகாட்டுதல்களின் மூலமாகத்தான் தெய்வங்களைப் பற்றிய
அறிவும், அவற்றை வழிபடும் முறைகளும் ஏற்பட்டனடவே தவிர ஆராய்ச்சியாளர்கள்
சொல்வது போல, கற்கால மனிதனது அறிவு வளர்ச்சியில் கருத்துக்களை உண்டாக்கி,
உருட்டிப்போட்டு, உருவாக்கவில்லை.
பாரதம் முழுவதும் இருந்த மக்கள் ஆங்காங்கே தத்தமக்கென்று ஒரு ஆன்மீகப் பிடிப்பைக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் துணி வெளுக்கும் வண்ணார் மக்களைப் பற்றிய ஒரு செப்புப் பட்டயம் சிதம்பரத்தில் கிடைத்தது. (கல்வெட்டு காலாண்டிதழ் – 82, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை) அதன் மூலம் சில அரிய செய்திகள் கிடைத்துள்ளன, இன்று நாம் மொழிரீதியாக மக்கள் இனம் பிரிந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தச் செப்புப் பட்டயம் எழுதப்பட்ட 17 நூற்றாண்டு வரையில், மக்கள் மொழி ரீதியாகத் தங்களை ஒரே இனம் என்று காணவில்லை, பிரிக்கவும் இல்லை. வண்ணார்கள் பாரதம் முழுவதும் இருந்தனர். ஒவ்வொரு இடத்திலும் இருந்தவர்கள், அந்தந்த இடங்களில் புழங்கிய மொழியைப் பேசியிருக்கின்றனர். வேறு வேறு மொழிகளைப் பேசிய வண்ணார்கள் தாங்கள் ஒரே இனம் அல்லது சாதி என்று கருதினார்கள். அவர்கள் தொழில், அந்த்த் தொழில் கொடுத்த வாழ்க்கை முறை அவர்களை ஒரே சாதியாக இனம் கண்டு கொள்ளப் பயன்பட்ட்து.
இதனால் ஒரு வண்ணார் இன்னொரு வண்ணாரைப் பார்த்தால், அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை ஏற்பட்டுவிடுகிறது. வட இந்தியாவிலிருந்து வந்த வண்ணாருக்குத் தென் இந்திய வண்ணாரிடம் ஒரு பற்றும், ஓரினம் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. இது போலவே அந்தந்த தொழில் செய்தவர்களுக்கு, அதே தொழிலைச் செய்தவர்களிடம் ஒரே இனம் என்ற எண்ணம் ஏற்பட்டிருகிறது.
இந்தச் செப்புப் பட்டயத்தின் மூலம், விஜய நகரப் பேரரசர், சிதம்பரத்துக்கு வருகை தந்த விவரம் தெரிகிறது, அப்பொழுது அவரது துணிகளைத் துவைக்கும் வண்ணாரும் கூடவே வந்துள்ளார். வந்த இடத்தில், மற்ற வண்ணார்களைச் சந்திக்கிறார். வண்ணார் மடம் இருந்த இடத்தைத் தேடிப் போய்ப் பார்க்கிறார். வண்ணார்களுக்கென்று மடம் இருந்திருக்கிறது,, மடத்தலைவர் இருந்திருக்கிறார். வண்ணார் திருமணங்களை மடத்தலைவர் செய்து வைத்திருக்கிறார். திருமணத்தின் போது, இரு வீட்டாரும் மடத்தின் செலவுக்காக ஒரு காசு கொடுக்க வேண்டும் என்ற முறை இருந்திருக்கிறது.
அரசரது வண்ணார், வந்தபோது, சிதம்பரத்தில் இருந்த அந்த மடம் சரிவர இயங்கவில்லை. அதில் இருந்த குறைபாடுகளை, அவர் மன்னனிடம் எடுத்துச் சொல்லி, மடம் நன்கு இயங்க ஆவன் செய்கிறார். இவையே அந்தச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன.
அதில் வண்ணார் சமூகத்தினர் உண்டான வரலாறும், அவர்கள் முன்னோர்கள் தவம் இயற்றிய பாங்கும் சொல்லப்படுகிறது. அவ்வாறு இருந்த ஒருவர் காசிக்குச் சென்று ரிஷிகளிடத்தில் தீட்சை பெற்று வந்த விவரமும் சொல்லப்பட்டுள்ளது. வண்ணார் சாதி என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் அவர்களுக்குப் பல இடங்களிலும் மடங்கள் இருந்திருக்கின்றன, எல்லா மடங்களுக்குமாக ஒரு தலைவர் இருந்திருக்கிறார். அவர் சிதம்பரம் வரும் போது தங்கும் வசதி, உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்தது பற்றியும் அதில் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே தொழிலைச் செய்தவர்களுக்கிடையே பாரதமெங்கும் தொடர்பு இருந்திருக்கிறது. அவர்களுக்குள் தவ வாழ்க்கை மேற்கொண்ட தாபதர்கள் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.
பாரதம் முழுவதும் இருந்த மக்கள் ஆங்காங்கே தத்தமக்கென்று ஒரு ஆன்மீகப் பிடிப்பைக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் துணி வெளுக்கும் வண்ணார் மக்களைப் பற்றிய ஒரு செப்புப் பட்டயம் சிதம்பரத்தில் கிடைத்தது. (கல்வெட்டு காலாண்டிதழ் – 82, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை) அதன் மூலம் சில அரிய செய்திகள் கிடைத்துள்ளன, இன்று நாம் மொழிரீதியாக மக்கள் இனம் பிரிந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தச் செப்புப் பட்டயம் எழுதப்பட்ட 17 நூற்றாண்டு வரையில், மக்கள் மொழி ரீதியாகத் தங்களை ஒரே இனம் என்று காணவில்லை, பிரிக்கவும் இல்லை. வண்ணார்கள் பாரதம் முழுவதும் இருந்தனர். ஒவ்வொரு இடத்திலும் இருந்தவர்கள், அந்தந்த இடங்களில் புழங்கிய மொழியைப் பேசியிருக்கின்றனர். வேறு வேறு மொழிகளைப் பேசிய வண்ணார்கள் தாங்கள் ஒரே இனம் அல்லது சாதி என்று கருதினார்கள். அவர்கள் தொழில், அந்த்த் தொழில் கொடுத்த வாழ்க்கை முறை அவர்களை ஒரே சாதியாக இனம் கண்டு கொள்ளப் பயன்பட்ட்து.
இதனால் ஒரு வண்ணார் இன்னொரு வண்ணாரைப் பார்த்தால், அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை ஏற்பட்டுவிடுகிறது. வட இந்தியாவிலிருந்து வந்த வண்ணாருக்குத் தென் இந்திய வண்ணாரிடம் ஒரு பற்றும், ஓரினம் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. இது போலவே அந்தந்த தொழில் செய்தவர்களுக்கு, அதே தொழிலைச் செய்தவர்களிடம் ஒரே இனம் என்ற எண்ணம் ஏற்பட்டிருகிறது.
இந்தச் செப்புப் பட்டயத்தின் மூலம், விஜய நகரப் பேரரசர், சிதம்பரத்துக்கு வருகை தந்த விவரம் தெரிகிறது, அப்பொழுது அவரது துணிகளைத் துவைக்கும் வண்ணாரும் கூடவே வந்துள்ளார். வந்த இடத்தில், மற்ற வண்ணார்களைச் சந்திக்கிறார். வண்ணார் மடம் இருந்த இடத்தைத் தேடிப் போய்ப் பார்க்கிறார். வண்ணார்களுக்கென்று மடம் இருந்திருக்கிறது,, மடத்தலைவர் இருந்திருக்கிறார். வண்ணார் திருமணங்களை மடத்தலைவர் செய்து வைத்திருக்கிறார். திருமணத்தின் போது, இரு வீட்டாரும் மடத்தின் செலவுக்காக ஒரு காசு கொடுக்க வேண்டும் என்ற முறை இருந்திருக்கிறது.
அரசரது வண்ணார், வந்தபோது, சிதம்பரத்தில் இருந்த அந்த மடம் சரிவர இயங்கவில்லை. அதில் இருந்த குறைபாடுகளை, அவர் மன்னனிடம் எடுத்துச் சொல்லி, மடம் நன்கு இயங்க ஆவன் செய்கிறார். இவையே அந்தச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன.
அதில் வண்ணார் சமூகத்தினர் உண்டான வரலாறும், அவர்கள் முன்னோர்கள் தவம் இயற்றிய பாங்கும் சொல்லப்படுகிறது. அவ்வாறு இருந்த ஒருவர் காசிக்குச் சென்று ரிஷிகளிடத்தில் தீட்சை பெற்று வந்த விவரமும் சொல்லப்பட்டுள்ளது. வண்ணார் சாதி என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் அவர்களுக்குப் பல இடங்களிலும் மடங்கள் இருந்திருக்கின்றன, எல்லா மடங்களுக்குமாக ஒரு தலைவர் இருந்திருக்கிறார். அவர் சிதம்பரம் வரும் போது தங்கும் வசதி, உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்தது பற்றியும் அதில் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே தொழிலைச் செய்தவர்களுக்கிடையே பாரதமெங்கும் தொடர்பு இருந்திருக்கிறது. அவர்களுக்குள் தவ வாழ்க்கை மேற்கொண்ட தாபதர்கள் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.
வண்ணார் கோவில் Vannar Temple
முன்னர் ஒரு காலத்தில் தேனாம்பேட்டை எனப்படும்
மத்திய சென்னையின் இடம் வெகு தூரத்துக்கு பரவி இருந்தது. அங்கிருந்து
கடல்கரை வரை தோப்புக்களும் மரங்கள் அடர்ந்த பகுதிகளுமாக இருந்தனவாம்.
அப்போதெல்லாம் அங்கு ஒரு பெரிய ஏரியும் உண்டாம். மக்கள் அந்த ஏரியில்தான்
சென்று குளிப்பதும் மற்றவற்றை செய்வதும் உண்டாம். அதன் ஒருபுறம்
வண்ணான்கள் துணிகளைத் துவைப்பார்கள். அதனால்தான் இன்றும் அந்த பகுதியில்
ஒரு இடத்தில் வண்ணான்துறை உள்ளது.
ஆலையம்மன் தல வரலாறு
ஒரு காலத்தில் வண்ணான் ஒருவன் தினமும் ஏரியின் படியில் துணிகளைத் துவைத்து எடுத்து வருவான். ஒரு முறை பெரும் மழையினால் ஏரி நிறம்பி வெள்ளமே வந்து விட்டது. தொழிலை அதற்காக விட்டு விட முடியுமா? வண்ணான் எப்போதும் போல அங்கு துணிகளைத் துவைக்கச் சென்றான். துணிகளை அடித்துத் துவைக்க படிகளும் இல்லை. வெள்ளத்தில் முழுகி இருந்தது. என்ன செய்வது என திகைத்து இருக்கையில் அந்த ஏரியின் தண்ணீரில் ஒரு பெரிய பாறை மிதந்து வருவதைக் கண்டான். நீந்திச் சென்று அதை கரைக்கு இழுத்து வந்து அதன் மீது துணியைத் துவைக்கத் துவங்க துணியில் இரத்தக் கறைகள்..........பயந்து போனவன் தன் முகத்தை துடைத்துக் கொள்ள அதிலும்; இரத்தம். அடுத்து மூக்கு, காது, வாய் என அவன் உடலில் இருந்து இரத்தம் பெருக்கிட மயங்கி கரையருகில் விழுந்து விட்டான்.அதே நேரத்தில் அற்த ஊர் நாட்டாண்மையார் வீட்டில் இருந்த ஒரு பெண்மணிக்கு சாமி வந்து ஆடினாள். 'உன் ஊரைக் காக்க வந்த என் மீதா துணிகளைத் துவைக்கிறாய்.....போ...போய் என்னை எடுத்து வந்து அந்த வண்ணான் கையினால் ஆலயம் அமைத்திடு' எனக் கத்தத் துவங்க, எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவளை சாந்தப் படுத்தி அமர வைத்து ஊராரை அழைத்துக் கொண்டு ஏரிக்கரைக்குச் சென்று பார்த்தால் வண்ணான் மயங்கிக் கிடந்ததைக் கண்டனர்.
அவனை தண்ணீரில் இருந்து வெளியில் இழுத்து வந்து என்ன நடந்தது எனக் கேட்க அவன் தனக்கு நடந்ததைக் கூறினான். ஆனால் துணியிலோ, அவன் உடம்பிலோ இரத்தக் கறைகளே இல்லை. அந்த பாறையும் காணப்படவில்லை. அழகிய அம்மனின் சிலையே பாறைப் போலக் கிடந்தது. மீண்டும் அதே பெண்மணிக்கு அங்கும் சாமி வந்தது. ' மைந்தா, உன்னைதான் எனக்கு ஆலயம் அமைக்கத் தேர்ந்து எடுத்தேன். போ..........போய் அந்த சிலையை எடுத்து வந்து எனக்கு ஆலயம் அமைத்திடு' எனக் கூற ஊரார் மீண்டும் கூடி விவாதித்தப் பின் அந்த சிலையை எடுத்து வந்து தற்போது தேனாம்பேட்டையில் அந்த ஆலயம் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்தனர். அவள் அலைமீது மிதந்து வந்ததினால் அலை அம்மன் என அழைக்கப்பட்டு பின்னர் அவள் ஆலையம்மன் என மருவினாள்.
ஆலயம் அண்ணா சாலையில் தேனாம்பேட்டையில் தியாகராஜ நகர் செல்லும் திருப்பத்தில் உள்ளது. ஆலயத்தில் அர்த்த மண்டபம், நவக்கிரகம்,வினாயகர், சுப்ரமண்யர், நாகதேவதைகள் என அனைவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. தேனாம்பேட்டையில் மிகப் பிரபலமான அந்த ஆலயம் எழுந்த காலம் தெரியவில்லை. ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறுகிறார்கள்.
ஆலையம்மன் தல வரலாறு
ஒரு காலத்தில் வண்ணான் ஒருவன் தினமும் ஏரியின் படியில் துணிகளைத் துவைத்து எடுத்து வருவான். ஒரு முறை பெரும் மழையினால் ஏரி நிறம்பி வெள்ளமே வந்து விட்டது. தொழிலை அதற்காக விட்டு விட முடியுமா? வண்ணான் எப்போதும் போல அங்கு துணிகளைத் துவைக்கச் சென்றான். துணிகளை அடித்துத் துவைக்க படிகளும் இல்லை. வெள்ளத்தில் முழுகி இருந்தது. என்ன செய்வது என திகைத்து இருக்கையில் அந்த ஏரியின் தண்ணீரில் ஒரு பெரிய பாறை மிதந்து வருவதைக் கண்டான். நீந்திச் சென்று அதை கரைக்கு இழுத்து வந்து அதன் மீது துணியைத் துவைக்கத் துவங்க துணியில் இரத்தக் கறைகள்..........பயந்து போனவன் தன் முகத்தை துடைத்துக் கொள்ள அதிலும்; இரத்தம். அடுத்து மூக்கு, காது, வாய் என அவன் உடலில் இருந்து இரத்தம் பெருக்கிட மயங்கி கரையருகில் விழுந்து விட்டான்.அதே நேரத்தில் அற்த ஊர் நாட்டாண்மையார் வீட்டில் இருந்த ஒரு பெண்மணிக்கு சாமி வந்து ஆடினாள். 'உன் ஊரைக் காக்க வந்த என் மீதா துணிகளைத் துவைக்கிறாய்.....போ...போய் என்னை எடுத்து வந்து அந்த வண்ணான் கையினால் ஆலயம் அமைத்திடு' எனக் கத்தத் துவங்க, எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவளை சாந்தப் படுத்தி அமர வைத்து ஊராரை அழைத்துக் கொண்டு ஏரிக்கரைக்குச் சென்று பார்த்தால் வண்ணான் மயங்கிக் கிடந்ததைக் கண்டனர்.
அவனை தண்ணீரில் இருந்து வெளியில் இழுத்து வந்து என்ன நடந்தது எனக் கேட்க அவன் தனக்கு நடந்ததைக் கூறினான். ஆனால் துணியிலோ, அவன் உடம்பிலோ இரத்தக் கறைகளே இல்லை. அந்த பாறையும் காணப்படவில்லை. அழகிய அம்மனின் சிலையே பாறைப் போலக் கிடந்தது. மீண்டும் அதே பெண்மணிக்கு அங்கும் சாமி வந்தது. ' மைந்தா, உன்னைதான் எனக்கு ஆலயம் அமைக்கத் தேர்ந்து எடுத்தேன். போ..........போய் அந்த சிலையை எடுத்து வந்து எனக்கு ஆலயம் அமைத்திடு' எனக் கூற ஊரார் மீண்டும் கூடி விவாதித்தப் பின் அந்த சிலையை எடுத்து வந்து தற்போது தேனாம்பேட்டையில் அந்த ஆலயம் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்தனர். அவள் அலைமீது மிதந்து வந்ததினால் அலை அம்மன் என அழைக்கப்பட்டு பின்னர் அவள் ஆலையம்மன் என மருவினாள்.
ஆலயம் அண்ணா சாலையில் தேனாம்பேட்டையில் தியாகராஜ நகர் செல்லும் திருப்பத்தில் உள்ளது. ஆலயத்தில் அர்த்த மண்டபம், நவக்கிரகம்,வினாயகர், சுப்ரமண்யர், நாகதேவதைகள் என அனைவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. தேனாம்பேட்டையில் மிகப் பிரபலமான அந்த ஆலயம் எழுந்த காலம் தெரியவில்லை. ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறுகிறார்கள்.